Wednesday, September 9, 2020

ஒரு இந்தியனின் திறமை

நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர், அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும், தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம் புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார், கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும்.

வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்கப் பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். 

பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார். இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார்.

அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம் தான் எங்களுக்கு இன்னும் புரியலெ. நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவு பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம் என்றார்.

அதற்கு அந்த இந்தியர், நான் ஏர்போர்ட்டில் காரை இரு வாரத்திற்கு நிறுத்தி வைத்தால் 50 டாலராவது தரவேண்டி வரும். அதனால் தான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு இங்கு நிறுத்தினேன். அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டு போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடிவு செய்தே கடன் வாங்கினேன் என்றார்.

No comments :

Post a Comment