Sunday, March 31, 2019

மனதில் தோன்றிய எண்ணங்கள் 1156 TO 1170

1156. எல்லோரும் அரசியலைப் பற்றி எழுதுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியை ஆதரிப்பதால் என்ன பலன் என்று சொன்னால், நானும் ஒரு கட்சியை ஆதரிக்கலாம்.

1157. ஜனநாயகம் என்பது, பலருடைய சந்தோஷத்திற்காக ஒருவர் கஷ்டப்படுவது. இப்போது ஒருவருடைய சந்தோஷத்திற்காக, பலர் கஷ்டப்படுகிறார்கள். சரிதானே?


1158. தலைவர் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார். தலைமைப் பதவி ஒரு திறமை. சைக்கிள் ஒட்ட, சமையல் செய்ய கற்றுக்கொள்வது போல அதை கற்க வேண்டும்


1159. தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தான் மேல் என்று நமக்கு சிறு வயதில் இருந்தே பாடம் நடத்தி மண்டையில் ஏற்றி இருக்கிறார்களே என்ன செய்ய?


1160. கொஞ்சமும் தகுதி இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து விட்டு குத்துதே,குடையுதே என்றால் யார் என்ன பண்ண முடியும்?ஐந்து வருடம் பொறுக்க வேண்டும்


1161. அரசியல்வாதிகள் ஊழல் அதிகம் செய்கிறார்களா, மக்கள் அதிகம் ஊழல் செய்கிறார்களா, என்பது விவாதிக்க வேண்டிய ஒன்று. நீங்களே சொல்லுங்களேன்.


1162. தேர்தல் ஆணையத்தை நியமித்து விட்டு அதன் விதிமுறைகளை பின்பற்றாமல் செலவு செய்வது என்ன நியாயம் என்று யாராவது எண்ணிப் பார்க்கிறார்களா?


1163. ஹிந்தி பேசாத பல மாநிலங்கள் அகில இந்திய கட்சிகளைத் தவிர்த்து பிராந்தியக் கட்சிகளை ஆதரிக்கின்றன.இது நமது நாட்டிற்கு நல்லதா, கெடுதலா?


1164. ஒரு கட்சி பெரும்பான்மை அரசு அமைத்தால்,லஞ்சம், ஊழல்,ஸர்வாதிகாரம் நடக்கிறது.கூட்டணி அமைந்தால், குடுமிபிடி சண்டை நடக்கிறது.என்ன வழி?


1165. சமூகம் இல்லாமல் நாம் இல்லை. அரசியல் இல்லாமல் சமூகம் இல்லை. சமூகம் உய்ய, நாம் அதை முன்னேற்ற அல்லது சீர்படுத்தப் பாடுபடுவது நம் கடமை


1166. ஒருவர் அரசியல் கட்சிகளின் மேல் உள்ள தனது பார்வையை, நடுநிலையோடு விமர்சித்து எழுத வேண்டும். அதுவே அவர் சமூகத்திற்கு செய்யும் தொண்டு.


1167. 
இருப்பதில் நல்லதை, நாட்டிற்கு நல்லதை, நமக்குத் தோன்றும் நல்லதை, நல்லவிதமாக, நாலு பேருக்குப் புரியும் விதத்தில் நாம் சொல்ல வேண்டும்.

1168. லஞ்சம், ஊழல், கறுப்புப் பணம், கற்பழிப்பு, மது, மாது, கொலை, கொள்ளை, அராஜகம், நாடாய்யா இது? இந்தப் புண்ணிய பூமி பாவ பூமி ஆகிவிட்டது.


1169. தனி மரம் தோப்பாகாது.தனி மனிதன் நாட்டை திருத்த முடியாது.முதலில் மக்கள் திருந்த வேண்டும்.பிறகு அரசியல்வாதிகள்.பிறகு அரசு.பிறகு நாடு. 


1170. ஒருவரால் ஏமாற்றப்பட்ட பிறகுதான் உலகம் தெரிகிறது. ஞானம் பிறக்கிறது. ஜாக்கிரதை உணர்வு வருகிறது. தற்காப்பு முயற்சி எடுக்கப் படுகிறது.


No comments :

Post a Comment