(சிரிக்காமல் படிக்கவும் )
என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்..?
ENT டாக்டர் :
"காதோடுதான் நான் பாடுவேன்.."
கண் டாக்டர்:
"பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் சொல் வேண்டுமோ.."
ஆர்தோ டாக்டர்:
"ஆஹா மெல்ல நட ,மெல்ல நட, மேனி என்னாகும்
முல்லை மலர்ப் பாதம் நோகும்.."
ஹார்ட் டாக்டர்:
"என்னதான் ரகசியமோ இதயத்திலே.."
குழந்தை நல டாக்டர்:
"இது குழந்தை பாடும் தாலாட்டு.."
மகப்பேறு டாக்டர்:
"காது கொடுத்து கேட்டேன். ஆஹா, குவா குவா சத்தம்.."
இஸ்ரோ விஞ்ஞானி:
"நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்."
தபால்காரர்:
"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்.."
பூக்கடைகாரர்:
"ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ. உன் பேர சொல்லும் ரோசாப்பூ.
தீ அணைப்பு அதிகாரி :
"அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு.."
கூகுள் அலெக்சா:
"உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும்தெரியாது..!
கரப்பான் பூச்சி:
"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்.."
விமான பைலட்:
"பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.."
ஓட்டல் உரிமையாளர்:
"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்.."
கணக்கு வாத்தியார்:
"வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா.."
சோசியல் ஸ்டடிஸ் வாத்தியார்:
"மதுரையில் பறந்த மீன் கொடியில் உன் கண்களைக் கண்டேனே.."
PT வாத்தியார்:
"பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும்போது..."
டிராயிங் மாஸ்டர்:
"சித்திரம் பேசுதடி, என் சிந்தை மயங்குதடி.."
ஏர்டெல் நெட்வர்க்:
"நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ.."
சில்லரை வியாபாரி:
"இந்தப் புன்னகை என்ன விலை..?"
பாதிரியார்:
"தேவன் கோவில் மணியோசை, நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை.."
AC மெகானிக்:
"ஜில்லென்று காற்று வந்ததோ.."
இளைஞன்:
"குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, குடியிருக்க நான் வரவேண்டும்.."
காதல் தோல்வியுற்றவர் :
"காதலுக்கு கண்கள் இல்லை மானே, கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்நானே.."
பால்காரர்:
"வந்தேன்டா பால்காரன் அடடா.. பசு மாட்ட பத்திப் பாடப் போறேன்.."
குடும்பஸ்தன்:
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.."
No comments :
Post a Comment