மனம் ஒரு குரங்கு. அது தவறான வழிகளில் போகாமல் இருக்க, தனக்குத்தானே கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டு, நல்ல வழிகளில் செல்வதுநல்லது.
மற்றவரைப் பாராட்டுவது ஒரு கலை.யாருக்கும் சுலபத்தில் வராது.ஏன்பாராட்ட வேண்டும் என்று தோன்றும். விடாதீர்கள். பலன் பின்னால் தெரியும்
மகன் அப்பா ஆகும்போது, அப்பா தாத்தா ஆகி விடுவார். மகன் ஒருபோதும்உலக அறிவிலும், அனுபவத்திலும், ஞானத்திலும் அப்பாவை விஞ்சமுடியாது.
தாய், தந்தை, மனைவி, மக்கள்தான் உலகம் . அவர்களுக்காக உயிரைக்கொடு. அதில் தான் உண்மையான சந்தோஷம் இருக்கு. மற்றது எல்லாம்மாயை.
என்னை விட நீ பெரியவன் என்றால், நான் உன்னை விட மிகப் பெரியவன். நீஎன்னை விடச் சிறியவன் என்றால் அடியேன் உன்னை விட மிகச் சிறியவன் .
நண்பன் கடன் கேட்டான். என் தந்தை கூறினார். பணம் முக்கியம் என்றால் நண்பனை மறந்து விடு. நண்பன் முக்கியம் என்றால் பணத்தை மறந்துவிடு.
ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், ஒருவர் தன்னுடைய நிதி நிலைமுன்னேற்றத்தைக் கணக்கு இடுதல் மிக அவசியம் . அதுவே அவர்வளர்ச்சியைக் காட்டும்.
சினிமா மோகம், அரசியல் ஆதரவு, மதச் சார்பு, ஜாதி உணர்வு, இவைகளைநாம் அறவே தவிர்த்தால் நமது நாடும், மக்களும் முன்னேறும் வாய்ப்புண்டு.
அட, தினம் காலையும் மாலையும் இறைவனிடம் சில நிமிடங்கள்பிரார்த்தனை, சின்ன ஸ்லோகம், 12 தோப்புக்கரணம், இது கூட நம்மால்செய்யமுடியாதா?
வாழ்க்கையில் முன்னேற, சிறந்த அறிவு, பண்பாடு , ஞானம், நல்ல குணம் உள்ள ஒருவரை வழி காட்டியாக ஏற்று அவர் சொற்படி நடக்க வேண்டும்.
ஏழைத் தொழிலாளிகள், வேலைக்காரர்கள், சிறு வியாபாரிகளிடம் பேரம்பேசுவது மனிதாபிமானம் அல்ல. மேலே போட்டுக் கொடுப்பது [டிப்ஸ்] உத்தமம்.
இருக்கும் வரை ஆஸ்தி. இறந்த பிறகு அஸ்தி. இதில் யார் ஒஸ்தி என்று ஏன் போடுகிறான் குஸ்தி?
ஒரு வார்த்தைக்கு இறுதியில் “நர்” வருமா, “னர்” வருமா என்பதற்கு விதி தெரியுமா? (ஓட்டுநர் / செய்தனர் )
தமிழில் எந்த மூன்று மெய் எழுத்துக்களுக்கு அருகில் இன்னொரு மெய் எழுத்து வரும்? ய், ர், ழ் இந்த மூன்று மெய் எழுத்துக்களுக்கு அருகில் மட்டும் இன்னொரு மெய் எழுத்து வரும். தாழ்ப்பாள், தேர்ப் பாகன், தேங்காய்ப் பால்.
தோப்பா அல்லது தோட்டமா? அதிக நாட்கள் பயன் பட்டால் தோப்பு. குறைந்த நாட்கள் பயன் பட்டால் தோட்டம். தென்னந் தோப்பு / வாழைத் தோட்டம்.
No comments :
Post a Comment